பொய்யை சொல்லி எத்தனை காலம் ஆட்சி நடத்துவீர்கள் ?-அண்ணாமலை

by Editor / 22-09-2022 10:22:42pm
பொய்யை சொல்லி எத்தனை காலம் ஆட்சி நடத்துவீர்கள் ?-அண்ணாமலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறும் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் எங்கும் கஞ்சா புழக்கம் இருக்கிறது. அதை விற்பவர்களை கைது செய்யாமல், பாஜக தொண்டர்களை குறிவைத்து கைது செய்கிறார்கள். குற்றவாளிகளை விட, தன்னை எதிர்ப்பவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமாக உள்ளது:

இனி அதிரடியாக தான் எங்கள் அரசியல் இருக்கும். கைதுக்கு நாங்கள் அஞ்சப்போவது இல்லை. பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள். செய்ய முடியாது என்று தெரிந்து, வாக்குறுதி தந்தீர்கள். இன்னமும் சின்னக் குழந்தை போல செய்வேன் என்கிறீர்கள்.

நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்று மின் கட்டணத்தை ஏற்றிவிட்டு, மோடி சொன்னார் என்கிறீர்கள். சொத்து வரியை உயர்த்தினீர்கள். ஏன் என்று கேட்டால் மோடி சொன்னார் என்கிறீர்கள். மோடி எப்போது சொன்னார் ? பொய்யை சொல்லி எத்தனை காலம் ஆட்சி நடத்துவீர்கள் ?

ராகுல்காந்தி நடந்து செல்கிறார். வீட்டில் நடப்பவர், இன்று ரோட்டில் நடக்கிறார். பிரிவினைவாத செயல்களை தூண்டுபவர்கள் தான் அவர் சந்தித்து வருகிறார். இந்த பாதயாத்திரை முடியும் போது, காங்கிரஸ் தேய்ந்திருக்கும் என்பது மட்டும் உறுதி.

கடைசி மூன்று மாதத்தில் தமிழகத்தை  விட மகாராஷ்டிரா, குஜராத்,கர்நாடக போன்ற மாநிலங்களில் ஜி.எஸ்.டி வருவாய் அதிகம் ஈட்டியுள்ளர்கள், அம்மாநில நிதியமைச்சர்கள் யாரும் 2 பிஎச்டி படித்தவர்கள் அல்ல என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசினார்.

 

Tags :

Share via