பெண்கள் துணிந்து பணியாற்றலாம் என்று உணர்த்தியவர் ஜெயலலிதா தமிழிசைசௌந்தரராஜன்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது படத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்கள் என்றாலே பணிந்து தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலையை மாற்றி, துணிந்து பணியாற்றலாம் என்று உணர்த்தியவர் ஜெயலலிதா எனப் பாராட்டினார்.
மேலும், கொள்கையில் மாறுபாடு இருந்தாலும், பெண்களும் துணிச்சலாக நின்று சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா எனக் கூறினார்.
Tags :