காவல்துறை விசாரணைக்காக சீமான் இன்று ஆஜராகிறார்
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார். சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கூறியிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலக்ஷ்மி புகாரை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags :