கஞ்சா கடத்தல் கும்பல் மற்றும் பிரிவினை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம்

by Editor / 09-06-2022 10:33:07am
 கஞ்சா கடத்தல் கும்பல் மற்றும் பிரிவினை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம்

நாகை - திருவாரூர் சாலையில் அக்கரைப்பேட்டை கிராமத்தில் கிராமத்தை நிர்வாகம் செய்வதில் இரண்டு தரப்பினர் மத்தியில்  கருத்து வேறுபாடு இருந்துவரும் நிலையில்  மீனவர்கள் கஞ்சா கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவும், கிராமத்தை பிளவுப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாலை மறியல் போராட்டம். கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட போலிசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Demanding action against cannabis smuggling gangs and separatists

Share via