கிணற்றில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

by Staff / 18-09-2023 02:01:56pm
கிணற்றில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

திருப்பூர் சத்யா நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் புவனேஷ் (வயது 18). சேலம் மாவட்டம் சங்ககிரி நாகிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் பாப்பேஜ் (17), ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் தீபக் (18), சேலம் மாவட்டம் தேவூர் காணியாளம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் சஞ்சய் (18), தேவூரை அடுத்த சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் கிஷோர் (18). இவர்கள் 5 பேரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். சி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நண்பர்களான 5 பேரும் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி குறும்படம் எடுக்க முடிவு செய்தனர். இதற்கு சீரங்க கவுண்டம்பாளையத்தை தேர்வு செய்த அவர்கள் நேற்று அங்கு சென்றனர். இதையடுத்து அங்குள்ள விவசாய தோட்டத்தில் குறும்படம் எடுப்பதற்காக சென்றனர். அப்போது சஞ்சீவுக்கு தோட்டத்தில் இருந்த கிணற்றில் கிணற்றில் இறங்கி குளித்தார். அப்போது நீச்சல் தெரியாததால் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தீபக் கிணற்றில் குதித்தார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து சிறிது நேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

 

Tags :

Share via