தாய்பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு.

by Staff / 21-09-2023 12:47:17pm
தாய்பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோஜபிரபாகரனின் ( 30). மனைவி தீதினா (23). இவர்களுக்கு 4 மாதத்தில் குழந்தை இருந்தது,இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை இறந்து விட்டது.இது குறித்து தீதினா காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் குழந்தையை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.இதுகுறித்து சமூக நலத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via