பெண் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

by Staff / 22-09-2023 12:36:00pm
பெண் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரயில்வே பெண் காவலர் ஜெயலெட்சுமி. இவர் தனது கணவர் சுப்புராஜ் மற்றும் பவித்ரா (11), காளிமுத்து (9) ஆகிய இரு குழந்தைகளுடன் மதுரை திருப்பாலை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தேனூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்)

 

Tags :

Share via