சனாதன விவகாரம்: சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு

by Staff / 23-09-2023 01:36:49pm
சனாதன விவகாரம்: சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு

சனாதான விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி தொடர்பான உச்சநீதிமன்ற நோட்டீஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டப்படி எதிர்கொள்வோம் என கூறினார். சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via