நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை-சீமான் எச்சரிக்கை!

by Editor / 21-01-2024 11:54:21am
நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை-சீமான் எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார்(45). இவர் நேற்று மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை அலுவலகத்துக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். ஆலய பங்குத்தந்தை, அரசு வக்கீல் மற்றும் தி.மு.க ஒன்றிய செயலாளர் உட்பட 8 குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலமெங்கும் போராட்டம் வெடிக்கும் என அரசுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த அறிக்கையில், கன்னியாகுமரி தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சேவியர்குமார், திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் அரங்கேற்றப்பட்ட இக்கொடூரமான படுகொலை குரூரத்தின் உச்சம். திமுகவினரின் வெளிப்படையான அட்டூழியமும், அடாவடித்தனமும் நெடுநாள் நீடிக்கப் போவதுமில்லை. கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டு, உடனடியாகக் சிறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் பெரும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.

 

Tags : நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை-சீமான் எச்சரிக்கை!

Share via