அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு கலவரம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் உள்ள ஷாப்பிங் மால் அருகே சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :