திமுக கட்சியிலிருந்து விலகி கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

by Admin / 14-08-2023 11:46:49pm
திமுக கட்சியிலிருந்து விலகி  கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் உள்பட்ட மீனாட்சிபுரம், உருளைகுடி, பிக்கிலிப்பட்டி காட்டுராமன்பட்டி, உள்ளிட்ட பகுதியில் இருந்து திமுக கட்சி சேர்ந்த கிளைச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில், 60-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திமுக கட்சி இருந்து விலகி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்லத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுக கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதற்கு முன்பதாக முடுக்குமீண்டான்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி முருகன், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி சின்னமலை குண்டு பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் மணிராஜ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கதர் ஸ்டோர்ஸ் சுப்புராஜ், அம்பிகை பாலன்,கடம்பூர் மாயா துரை, பாலாஜி,கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

திமுக கட்சியிலிருந்து விலகி  கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
 

Tags :

Share via