க்யூஆர்  கோடில்  ரயில் டிக்கெட் எடுக்கலாம்.

by Admin / 13-02-2022 09:18:08pm
க்யூஆர்  கோடில்  ரயில் டிக்கெட் எடுக்கலாம்.


ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் தெற்கு ரயில்வே   டிக்கெட்
எடுக்க  எளிதான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இது பற்றி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,சென்னையில்,எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்,மின்சார ரயில் டிக்கெட்களை எடுப்பதில் பயணிகளுக்குகாலதாமதம் தவிர்க்க தெற்கு ரயில்வே தானியங்கி டிக்கெட் விநியோகிக்கும் எந்திரத்தை ஒவ்வொரு டிக்கெட் வழங்கும்
கவுண்டர் அறை அருகே வைத்துள்ளது.இதனைப்பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.இந்த நிலையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில்
க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.பயணிகள்
க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி-பே,போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்
பெற்றுக்கொள்ளலாம்.க்யூஆர் கோடு வழி சீசன் டிக்கெட் புதுப்பிக்கலாம்என்றும் அதற்கு0.5சதவிகித சலுகை கொடுக்கப்
படும் என்று குறிப்பிப்பட்டுள்ளது.

 

க்யூஆர்  கோடில்  ரயில் டிக்கெட் எடுக்கலாம்.
 

Tags :

Share via