வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்தார் யோகேஷ் கத்தூனியா...

by Admin / 30-08-2021 01:17:10pm
வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்தார் யோகேஷ் கத்தூனியா...


ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் யோகேஷ் கத்தூனியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

 
டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பானில் உள்ள டோக்கியோ கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டி களைக்கட்டியுள்ளது. இதில் இந்தியா சார்பில் வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று  ஆண்களுக்கு நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற யோகேஷ் கத்தூனியா 44 புள்ளி 38 மீட்டர் தூரத்திற்கு வட்டினை எறிந்து, வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

 இவர் இறுதிப்போட்டியில் தனது 3வது மற்றும் கடைசி முயற்சியில் 2வது இடத்தை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள யோகேஷுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via