பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தி பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக நகரில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நிர்வாகங்கள் ஏற்கனவே விடுமுறை அளித்துள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு முழு அடைப்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் அறிவித்தார். பெங்களூரில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளது என்றார்.
Tags :