முதியவர் தீயில் கருகி பலி

by Staff / 27-09-2023 01:11:09pm
 முதியவர் தீயில் கருகி பலி

நாகர்கோவில் கீழப்பெருவிளை முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெரோம் (வயது 70). இவரை அவருடைய அண்ணன் மகன் ராஜப்பா (41) என்பவர் பராமரித்து வந்தார். ஜெரோமுக்கு பீடி, சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று அவர் பீடி குடிக்க தீ பற்ற வைத்த போது எதிர்பாராமல் அவர் மீது தீப்பிடித்து எரிந்தது. இதில் அவர் உடல் கருகி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை 2 மணிக்கு ஜெரோம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜப்பா கொடுத்த புகாரின்பேரில் நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

 

Tags :

Share via