இளைஞர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலை

by Staff / 27-09-2023 02:52:13pm
இளைஞர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலை

டெல்லியில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சுந்தர் நகரில் வசிக்கும் இசார் அகமது (வயது 26), பழம் வியாபாரம் செய்கிறார். அவரை திருடன் என சந்தேகித்து சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை மடக்கி பிடித்தனர். அதன்பின், அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களின் தாக்குதலை தாங்க முடியாமல் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via