உயிருக்கு போராடியவருக்கு உதவிய அமைச்சர்
சாலையில் உயிருக்கு போராடியவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உதவிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் பேச்சு, மூச்சின்றி இருந்த ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபரை தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் அமைச்சர். பின்னர் வேறொரு கார் வரும் வரை சாலையில் காத்திருந்த அமைச்சர், கார் வந்ததும் அதில் ஏறிச் சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Tags :