சிகரெட்டுக்காக நண்பர் கொடூர கொலை

by Staff / 14-10-2023 12:27:10pm
சிகரெட்டுக்காக நண்பர் கொடூர கொலை

ராஜஸ்தான் மாநிலத்தில் சிகரெட்டுக்காக நண்பரை கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக இளைஞர்கள் குடிபோதையில் கொடூரமான மற்றும் சோகமான சம்பவங்களைச் செய்கிறார்கள். இன்றைய எதிர்காலத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டிய இளைஞர்கள் கொடூர கொலைகளை செய்து வருகின்றனர். அதன்படி, போதையில் சிகரெட்டை பகிர்ந்து கொள்ள மறுத்ததால் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குற்றவாளி ஜிதேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via