பைக் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை.
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம், தலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (40). பெருந்துறை குன்னத்தூர் ரோடு, சுள்ளிப் பாளையம் பகுதியில் பைக் பட்டறை வைத்து நடத்தி வரும் இவர், அதன் அருகிலேயே மளிகை கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் கடந்த சில மாதங்களாக தொழிலை சரிவர கவனிக்க முடியாத நிலையில், ஏலச்சீட்டுக்கு தவணை கட்டாமல் இருந்துள்ளார். இதனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :