தெருவில் விளையாடிய சிறுவனை கடித்துத் குதறிய நாய்கள்

by Staff / 04-10-2023 05:11:57pm
தெருவில் விளையாடிய சிறுவனை கடித்துத் குதறிய நாய்கள்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இன்று காலை இவரது 2 வயது மகன் ஹர்ஷன் வீட்டின் முன்பு விளை யாடிக் கொண்டிருந்தான். ரோஜா வீட்டில் உள்ள அறையில் அமர்ந்து அவரது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டி ருந்தார். தெருவில் ஓடி வந்த 4 தெரு நாய்கள் சிறுவன் ஹர்ஷன் மீது பாய்ந்தன. சிறுவனை கடித்து குதறின. மேலும் 4 நாய்களும் சேர்ந்து சிறுவனை இழுத்துச் சென்றன. இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டனர். உடனடியாக சிறுவனை மீட்டு பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டான். தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் கட்டுக்கடங்காமல் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via