மகனை புதைத்த தந்தையால் பரபரப்பு

by Staff / 06-10-2023 03:09:17pm
மகனை புதைத்த தந்தையால் பரபரப்பு

சென்னை பெருவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி(65). இவர் ஆரணி ஆற்றுப்படுகையில் உள்ள காலியிடத்தில், தகர கொட்டைகை அமைத்து மனநலம் பாதித்த மகனுடன் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் கிடைக்கும் உணவு வாங்கி உண்டு மகனுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட  அவரது மகன் மணிகண்டன், நேற்று முன்தினம் தூக்கத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி கால்கள் வெளியில் தெரியும்படி புதைத்துள்ளனர்.இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் தனது மகன் இறந்து விட்டதாகவும், அவனை வீட்டின் பின்புறம் புதைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மணிகண்டன் உடல்நல பாதிப்பு காரணமாக இயற்கையாக இறந்திருப்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via