சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

by Staff / 24-09-2022 12:49:59pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரை அடுத்த கெளுத்தியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர் வயது 63 இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அதே கிராமத்தில் உள்ள பஸ் நிலையத்தில் தங்கியிருந்தார் அப்போது தனது தாத்தாவை தேடி 11 வயது சிறுமி ஒருவர் அங்கே வந்தார் அங்கு தனது தாத்தா இல்லாததை அறிந்த அந்த சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்கு முயற்சி செய்தார். அப்போது தனது நண்பரின் பேத்தியான அந்த சிறுமியை அழைத்த பன்னீர் தன்னிடம் இருந்த மாம்பழத்தையும் பத்து ரூபாயையும் சிறுமியிடம் கொடுத்தார் அந்த சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றார் மகள் அழுவதை பார்த்த பெற்றோர் சிறுமியை அழைத்து எதற்காக அழுகிறாய் என்ன நடந்தது என விசாரித்தனர் இது குறித்து பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீரை கைது செய்தனர் பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்புக்கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து முதியவர் பன்னீருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 20000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

 

Tags :

Share via