கஞ்சா விற்பனை ஒருவர் கைது

by Staff / 24-09-2022 12:44:06pm
கஞ்சா விற்பனை ஒருவர் கைது

மதுரை மாநகர் செல்லூர் அஹிம்சாபுரம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் அமர்ந்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்ததுஅதனை தொடர்ந்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

 

Tags :

Share via