மது போதையில் மருத்துவம். பல் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல்.

by Editor / 06-10-2023 10:08:58pm
மது போதையில் மருத்துவம். பல் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல்.

தென்காசி மாவட்டம் கடையம் பேருந்து நிலையம் அருகே ராமதங்கராஜன் என்பவரின் புன்னகை பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மது போதையிலேயே  நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று மாலை இவரிடம் பல் பிடுங்குவதற்காக. கீழக்கடையம் பகுதியை சேர்ந்த செல்வந்த் என்பவர்  சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மதுபோதையில் செல்வந்தின் பல்லை பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இவர் வாயில் இருந்து ரத்தம் வடிய துவங்கியுள்ளது. இதை சுதாரித்துக்கொண்ட செல்வந்த் அவரது நண்பருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து சென்ற அவரது நண்பர் செல்வந்த் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே மருத்துவரிடம் மது அருந்தி விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா..? என்று கேட்டுள்ளார்.

மேலும் மருத்துவர்  மது அருந்தியதை ஒப்பு கொண்டார் பின் அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக  இருந்துள்ளார். 
இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதலங்களில்  வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாவதால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் இந்த வீடியோ பரவியதை அடுத்து தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா தலைமையில் சுகாதாரத் துறை இணைந்து அதிரடியாக மருத்துவமனையை ஆய்வு செய்து பின்னர் காவல்துறை முன்னிலையில் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags : மது போதையில் மருத்துவம். பல் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல்.

Share via