தூங்கிக் கொண்டிருந்த சுமை தூக்கும்  தொழிலாளி கருகிய நிலையில் உயிரிழப்பு. 

by Editor / 06-05-2023 05:10:19pm
தூங்கிக் கொண்டிருந்த சுமை தூக்கும்  தொழிலாளி கருகிய நிலையில் உயிரிழப்பு. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கையா மகன் ஜோசப் (38). இவர் கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இன்று வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்று விட  தனியாக இருந்த ஜோசப் மாத்திரை சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி உள்ளார். இந்நிலையில் ஜோசப் வீட்டிலிருந்து பயங்கர சத்தத்துடன் தீ பற்றி எரிந்துள்ளது.மேலும் கரும் புகை வந்துள்ளது. இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது மட்டுமின்றி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்த போதிலும் , வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜோசப் கருகி நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் உள்ள பொருட்களும் எரிந்து நாசமானது‌.. போலீசார் ஜோசப் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via