தாய், சித்தி உதவியுடன் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... 3 பேர் கைது!

by Admin / 29-08-2021 10:51:09pm
தாய், சித்தி உதவியுடன் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... 3 பேர் கைது!



11, 9, 4 வயது சிறுமிகள் உட்பட 5 சிறுமிகளுக்கு தாய் மற்றும் சித்தியின் உதவியுடன் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் தாய் மற்றும் சித்தி உட்பட மூன்று நபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
 
டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்(48) என்பவருக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. பின்னர் 30 வயது பெண்ணின் சகோதரியான 28 வயது பெண்ணுடன் அவருக்கு கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 30 வயது பெண்ணின் 9 வயது மகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தாயின் அனுமதியோடு பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சிறுமியின் வீட்டுக்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளுக்கும் சிறுமியின் தாய் மற்றும் சித்தியுடன் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும் சிறுமியின் தாய் மற்றும் சித்தியின் உதவியுடன் அருகாமை வீட்டில் வசிக்கும் 15 வயது மற்றும் 17 வயது சிறுமிகளுக்கும் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.  இதனையடுத்து 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த பெருமாள் மற்றும் சிறுமியின் தாய் சித்தி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via