காட்டுப்பன்றிக்காக வைத்த நாட்டுவெடிகுண்டை கடித்த நாய் உடல் சிதறி பலி!

by Admin / 29-08-2021 10:50:40pm
காட்டுப்பன்றிக்காக வைத்த நாட்டுவெடிகுண்டை கடித்த நாய் உடல் சிதறி பலி!



வேலூர் அருகே காட்டுப்பன்றிகளால் பயிர்கள் அழியாமல் இருக்க வைத்த நாட்டு வெடிகுண்டை நாய் ஒன்று கடித்த போது குண்டு வெடித்து நாய் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தது.
 
வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் அருகே அன்பூண்டியில் உள்ள நிலங்களில் வேர்கடலை, கேழ்வரகு பயிர் செய்து வருகின்றனர். இரவில் வரும் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் அழியாமல் காப்பாற்ற, விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஆங்காக்கு மாமிசத்துடன் நாட்டு வெடி குண்டுகளை புதைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 8:00 மணிக்கு நாய் ஒன்று நிலத்தில் வைத்திருந்த மாமிசத்துடன் உள்ள வெடி குண்டை கவ்வியபடி அன்பூண்டிக்கு வந்தது. அப்போது குண்டு வெடித்து உடல் சிதறி நாய் இறந்தது.

விரிஞ்சிபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், அன்பூண்டி வயல்பகுதியில் காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற நுாற்றுக்கணக்கான வெடி குண்டுகள் மண்ணில் புதைத்து வைத்துள்ளது தெரியவந்தது. இதனால் அப்பகுதிக்குள் பொது மக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

 

Tags :

Share via