திருச்சியில் பெண் சிஷ்யயை மணந்த அகோரி பாபா

by Editor / 23-11-2021 12:02:34pm
 திருச்சியில் பெண் சிஷ்யயை மணந்த அகோரி பாபா

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிய மங்கலத்தைச் சேர்ந்தவர் பாபா மணிகண்டன். 
இவர் இளம் வயதிலேயே காசிக்குச் சென்று அங்கேயே அகோரிகளுடன் தங்கியிருந்து பயிற்சிகளை கற்றவர்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடன் இருந்த சில அகோரிகளையும் அழைத்துக்கொண்டு அரியமங்கலம் திரும்பினார். பாபா மணிகண்டன் சிஷ்யர் ஒருவர் சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த போது சிஷ்யரின் உடலின் மேல் அமர்ந்து விசித்திர பூஜை செய்தார் பாபா மணிகண்டன்,இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 மணிகண்டன் செய்கைகளால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது. அவ்வப்போது சுடுகாட்டிற்கும் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார். மணிகண்டன் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்வதாகவும் தெரிவித்து வருகிறார். நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் உடல் முழுவதும் விபூதி பூசி பூஜை நடத்தி வருகிறார்கள் . சங்குகள் முழங்க மிகுந்த சத்தத்துடன் நடத்தும் அந்த பூஜைகளால் அப்பகுதியினர் பதற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போலீசுக்கு புகார்களும் சென்றிருக்கின்றன.இந்தநிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாபா மணிகண்டனிடம் சிஷ்யராக வந்து சேர்ந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.கோவிலில் உடலில் முழுமையாக திருநீறு பூசிக்கொண்டு மாலை மாற்றிக் கொண்டு மகாதேவ மகாதேவ என மந்திரங்கள் முழங்க தாலி கட்டிக்கொண்ட அகோரி பாபா மணிகண்டனின் திருமண போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

 

Tags :

Share via