உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழக மாலுமி உள்பட 79 பேர் மீட்பு

by Admin / 08-03-2022 04:44:38pm
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழக மாலுமி உள்பட 79 பேர் மீட்பு

உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் உள்ளிட்ட 79 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி உக்ரைனுக்கு சுமார் ஐந்து கப்பல்களில் 74 இந்திய மாலுமிகள் மற்றும் 5 வெளிநாட்டினர் சென்ற நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பால் கடல்வழி மூடப்பட்டன.

இதனால் மைக்லோவ்   நகருக்கு அருகே அவர்கள் சென்ற கப்பல்கள் நடுக்கடலில் நின்றன இதையடுத்து மாலுமிகள் தங்கள் பணி புரியும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திடம் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தூதரகம் பேருந்துகளை ஏற்பாடு செய்து கப்பலில் இருந்தவர்களை 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மால்டோவா எல்லைக்கு பத்திரமாக அழைத்துச் சென்றது.

 பின்னர் அவர்கள் அங்கிருந்துவிமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்புகின்றனர்  

 

Tags :

Share via