பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய வீட்டு உரிமையாளர்

by Staff / 04-05-2024 12:37:34pm
பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய வீட்டு உரிமையாளர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தையல் மெஷின் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். 2021ஆம் ஆண்டு காந்தி நகரில் சரவணகுமார் என்பவரது லைன் வீட்டில் வாடகைக்கு குடி புகுந்தார். இந்த நிலையில், சரவணகுமார் ஜோதிமணிக்கு உதவுவது போல் நடித்து, அவரது வீட்டில் கேமராக்களை வைத்து ஜோதிமணியின் அந்தரங்கங்களை படம் பிடித்து மிரட்டி உள்ளார்.கடந்த ஒன்றாம் தேதி சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வாட்ஸ்அப் குழுவில் பதிவேற்றம் செய்த சரவணக்குமார் விக்கி, விவேக், பாலாஜி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சரவணகுமார் வைத்துள்ள, தனது அந்தரங்க வீடியோக்களை பெற்று நிரந்தரமாக அழிக்க வேண்டும் எனவும் திருச்செங்கோடு போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.

 

Tags :

Share via