ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
மயிலாடுதுறையில் ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு சொந்தமான இடங்களில்என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மூன்று இடங்கள் உட்பட தமிழகத்தில் மொத்தமாக எட்டு இடங்களிலும் காரைக்காலில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறையை சேர்ந்த சாதிக்பாட்சா எனப்படும் பாஷா அவனது கூட்டாளிகள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டார். சாதிக் பாஷா பல்வேறு இயக்கங்கள் தொடங்கி பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்ததை அடுத்து விசாரணையை தேசியா புலனாய்வு முகாமிற்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
Tags :