காதல் ஆசை - 12 வயது சிறுமி கடத்தல்

by Staff / 04-05-2024 12:24:28pm
காதல் ஆசை - 12 வயது சிறுமி கடத்தல்

சென்னை செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஒடிசா மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்து ஒடிசா சென்ற செங்குன்றம் போலீசார் சேகர் மற்றும் சிறுமியை பிடித்து சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via