குப்பை கிடங்கில் திடீர் தீ…

by Staff / 30-04-2023 03:36:50pm
குப்பை கிடங்கில் திடீர் தீ…

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் இலுப்பூர் சித்திரைக்குளம் அருகே உள்ள குப்பை கிடங்கில் மலை போன்று குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் இருந்து நேற்று மாலை திடீரென கரும்புகை வெளியேறியதாக கூ றப்படுகிறது.அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் குப்பை கிடங்கின் ஒருபகுதியில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. மேலும் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து பேரூராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via