காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்

by Staff / 30-04-2023 03:32:55pm
காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட இளைஞர் காங். , சார்பில், ராகுலின் எம். பி. , பதவி பறிப்பைக் கண்டித்தும், ஜனநாயகத்தை மீட்க வலியுறுத்தியும், நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடந்தது. திரு. வி. க. , விதி காமராஜர் சிலையில் தொடங்கிய ஊர்வலத்திற்கு இளைஞர் காங். , மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணை தலைவர் குலாம்மொய்தீன், மாநில செயலாளர் தயானந்தம், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சிறுவை ராமமூர்த்தி, நகர தலைவர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாபுசத்தியமூர்த்தி, பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார், முபாரக்அலி, நாராயணசாமி, மாவட்ட பொதுக்குழு தன்சிங், தொகுதி தலைவர் பிரபாகரன், சுரேஷ்ராம் மாவட்ட மகிளா காங். , தலைவர் லதா பீட்டர், மாநில செயலாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், தீப்பந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்து, பேசினார். காமராஜர் சாலையில் இருந்து பந்தம் ஏந்தியபடி காங். , கட்சியினர், திரு. வி. க. , வீதியில் பேரணியாக வந்து, காந்தி சிலை அருகே நிறைவு செய்தனர். ராகுல் காந்தி வழியில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும், மத்திய பாஜ. , அரசைக் கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

 

Tags :

Share via