இரவு நேரகொள்ளையர்கள் 6 பேர் கைது. 40 சவரன் தங்க நகை 3 லட்சம் ரூபாய் பணம் மீட்பு.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆலிவலம் வடபாதிமங்கலம் கூத்தாநல்லூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் இரவு நேர கொள்ளை நடைபெற்றதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் நாகை மாவட்டம் தென்னம்புலத்தைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் மகேஷ் முத்துப்பேட்டையை சேர்ந்த வினோத் என்கிற அஜித் வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரதாப் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த எபினேசர் ஆகிய 6 குற்றவாளிகளை கைது செய்து களவு போன 55 சவரன் தங்க நகையில் 40 சவரன் தங்க நகைகளையும் அதே போன்று களவுபோன 4 1/2 லட்ச ரூபாய் பணத்தில் 3 லட்சம் ரூபாயை மீட்டு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags : இரவு நேரகொள்ளையர்கள் கைது.