செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை

by Editor / 22-06-2022 09:12:09am
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து  நீர் திறப்பு கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மக்களின் குடிநீர்த்தேவைகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், ஏரியின் நீர் வரத்து வினாடிக்கு 775 கன அடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : Water opening from Sembarambakkam Lake Warning to the coastal public

Share via