சரியா ..தவறா.. இன்று முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாறது.12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 7,55,998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் 4,27,073 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Tags : OK .. Wrong .. You can apply from today till the 29th