மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி  தற்கொலை முயற்சி.

by Editor / 07-10-2023 08:17:40am
மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி  தற்கொலை முயற்சி.

மதுரை செல்லூர் மருதுபாண்டியர் நகர் பகுதியை சேர்ந்தவர்  கொக்கி விக்னேஷ்.கொலை வழக்கு ஒன்றில் கைதாகி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் இவருக்கு கடந்த சில நாட்களாக மனநல பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இவர் நேற்று சிறையில் உள்ள கழிப்பறையில் பிளேடால் தனது இடது கையில் ஆறு இடங்களில் அறுத்து தற்கொலைக்கு முயன்று உள்ளார் .அதனை தொடர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்ட அவர்  மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நீண்ட நாட்களாக உறவினர்கள் யாரும் இவரை சந்திக்க வராமல் இருந்தால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து சிறைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : மதுரை மத்திய சிறையில்கொலைவழக்கு கைதி  தற்கொலை முயற்சி.

Share via