மதுபோதையில் தாயிடம் தவறாக நடக்க முயன்ற மகன் கொலை. தாய் மற்றும் சகோதரன் கைது.

by Editor / 07-10-2023 08:32:17am
மதுபோதையில் தாயிடம் தவறாக நடக்க முயன்ற மகன் கொலை. தாய் மற்றும் சகோதரன் கைது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி, சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பழனிசாமி (50),சரோஜா (44). இந்த தம்பதியினருக்கு அருண்குமார் (27),கார்த்திக் (23) என்ற இரண்டு மகன்கள் உண்டு. அருண்குமார் அப்பகுதியில் வெல்டிங் வேலை செய்து வந்தார். அருண்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் ஒரு ஆண்டுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த மாதம் 6-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து அருண்குமார் உயிரிழந்து விட்டதாக தாய் சரோஜா, சகோதரன் கார்த்திக் ஆகியோர் உறவினர்களிடம் தெரிவித்து அருண்குமார் சடலத்தை மயானத்தில் எரியூட்டப்பட்டது.இந்நிலையில் அருண்குமார் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல்துறை  உயர் அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பினர். புகாரின் அடிப்படையில் தாய் சரோஜா சகோதரன் கார்த்திக் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அருண்குமார் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கடந்த மாதம் 6-ஆம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அருண்குமார் தாய் சரோஜாவிடம் தகாத உறவில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட சகோதரன் கார்த்திக் சம்பட்டியால் தாக்கியதில் அருண்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து வனவாசி கிராம நிர்வாக அலுவலர் முருகன் (58) நங்கவள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மகன் கார்த்திக், கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் சரோஜா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags : மதுபோதையில் தாயிடம் தவறாக நடக்க முயன்ற மகன் கொலை. தாய் மற்றும் சகோதரன் கைது.

Share via