மரண தண்டனையை எதிர்த்து மனு: கத்தார் நீதிமன்றம் ஏற்பு

by Staff / 24-11-2023 01:05:46pm
மரண தண்டனையை எதிர்த்து மனு: கத்தார் நீதிமன்றம் ஏற்பு

கத்தாரில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸில் இந்திய கடற்படை முன்னாள் அலுவலர்கள் எட்டு பேர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த கூறி கத்தார் அரசு கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்பளித்தது. இதை எதிர்த்து எட்டு பேரும் மேல்முறையீட்டு மனு செய்தனர். இவர்களின் இந்த மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றது. அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.

 

Tags :

Share via