பட்டாசு கடை தீ விபத்து -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஇரங்கல்.

by Editor / 08-10-2023 09:56:50am
பட்டாசு கடை தீ விபத்து -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஇரங்கல்.

கர்நாடக எல்லைப்பகுதியான ஓசூர் -அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளபட்டாசு கடையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பலியானோர்  எண்ணிக்கை13ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அத்திப்பள்ளி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பலர்  உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags : பட்டாசு கடை தீ விபத்து -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஇரங்கல்.

Share via