மாணவி தற்கொலை பேராசிரியர் மீது போலீசில் புகார்

by Staff / 09-10-2023 01:04:14pm
மாணவி தற்கொலை பேராசிரியர் மீது போலீசில் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படி இரண்டாம் ஆண்டு படித்து வந்த தூத்துக்குடியை சார்ந்த சிவக்குமார் என்பவருடைய மகள் சுகிர்தா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருடைய அறையில் இருந்து தன்னுடைய சாவுக்கு ஒரு பேராசிரியரும் ஒரு மாணவரும் ஒரு மாணவியம் தான் காரணம் என கடிதம் எழுதிய கடிதம் சிக்கியது. இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை சிவகுமார் குலசேகரன் காவல் நிலையத்தில் தன்னுடைய மகள் சாவுக்கு காரணமான மருத்துவ கல்லூரி பேராசிரியர் பரமசிவம், மாணவன் ஹரிஷ், மாணவி கிரிட்டி ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via