ரூ.17,000 கோடி பங்குகளை திரும்ப பெறும் டிசிஎஸ்

by Staff / 12-10-2023 11:34:39am
ரூ.17,000 கோடி பங்குகளை திரும்ப பெறும் டிசிஎஸ்

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது பெரும்பாலான பங்குகளை திரும்பப் பெற விரும்புகிறது. ரூ.17,000 கோடி மதிப்புள்ள பங்குகள் திரும்ப வாங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பங்கு ஒன்றுக்கு ரூ.4,150 வீதம் பங்குகளை திரும்பப்பெற உள்ளது. திரும்பி வாங்கும் திட்டத்திற்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 1.12% ஆகும். டிசிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் நிறுவனம் ஐந்தாவது முறையாக பங்குகளை திரும்பப்பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via