200 கிலோ புகையிலைப் பொருட்களை காரில் கடத்தியவர் கைது கார் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதியம்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் மதுரை மாவட்டம் பாஸ்கரதாஸ்நகரை சேர்ந்த செண்பகமூர்த்தி மகன் கார்த்திகேயன் (22) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி கார்த்திகேயனை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : 200 கிலோ புகையிலைப் பொருட்களை காரில் கடத்தியவர் கைது கார் பறிமுதல்.