மனைவி இறந்த செய்தியை கேட்டு பிஎஸ்எஃப் வீரர் தற்கொலை

by Staff / 19-10-2023 02:25:17pm
மனைவி இறந்த செய்தியை கேட்டு பிஎஸ்எஃப் வீரர் தற்கொலை

மனைவி இறந்த செய்தியை கேட்டு பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்பாராவில் பணியில் இருந்த பிஎஸ்எஃப் தலைமைக் காவலர் ராஜேந்திர யாதவ் (வயது 28), ராஜஸ்தான் மாநிலம் திர்பூர் கிராமத்தில் இருந்த தனது மனைவி அன்ஷு யாதவ் (வயது 24) என்பவருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி அன்ஷு தற்கொலை செய்து கொண்டார். அந்த மரணச் செய்தியைக் கேட்ட ராஜேந்திரனும் தன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டு உயிரிழந்தார்.இந்த சம்பவம் அவர்கள் இருவரின் குடுமபத்தையும் சோகத்தையும் மனவேதனையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via