மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி-முதல்வர் இரங்கல்.
மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி-முதல்வர் இரங்கல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த அயன் சிங்கம்பட்டி பகுதியில் வயலுக்கு நீர் பாய்ச்ச வாய்க்காலில் இறங்கி மடையை திறக்கும் முயன்ற போது விவசாயி பேச்சிமுத்து(55) மற்றும் அவரது மகன் பேரின்ப ராஜா(28) ஆகியோர் எதிர்பாராத விதமாக வனவிலங்குகள் வருவதை தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று - தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags : மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி-முதல்வர் இரங்கல்.