6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து

by Staff / 03-11-2023 04:48:06pm
6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோரையாற்று பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டதில் பேருந்துகள் ரோட்டின் நடுவே நிற்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 5 பேருந்துகள் ஒரு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via