பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

by Staff / 23-03-2024 03:45:12pm
பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் அமலாக்கத்துறை காவலை மார்ச் 26 வரை நீட்டித்து நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. அவரது காவலை மேலும் ஐந்து நாட்கள் நீட்டிக்குமாறு மத்திய புலனாய்வு அமைப்பு கோரியுள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, 'சவுத் குரூப்' குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினரான கவிதா (46) ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறையால் கடந்த 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via