காரில் தீ விபத்து தந்தை - மகன் உயிர்தப்பினர்.
ஈரோடு சங்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாட்ஷா. இவர் தனது மகன் பாபு உடன் இணைந்து காரில் பினாயில் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு வீடு திரும்பும் போது பழைய பாளையம் அருகே வரும் போது கார் பழுதடைந்துள்ளது. பழுதடைந்த காரை தள்ள முற்பட்ட போது காரில் தீ விபத்து ஏற்படுத்து சிறிது நேரத்தில் தீ கார் முழுவதும் பரவியது. இதனையடுத்து காரில் பயணம் செய்த பாட்ஷா மற்றும் மகன் பாபு ஆகிய இருவரும். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதனைத்தொடர்ந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் காரின் தீ விபத்து ஏற்படுத்த தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் காரில் விற்பனைக்காக வைத்திருந்த 500 லிட்டர் பினாயில் தீயில் எரிந்து சேதமாயின.
Tags :