ஷவர்மா விற்க தற்காலிக தடை
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஷவர்மா தயாரிக்க தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சம்மந்தப்பட்ட ஐவின்ஸ் உணவக உரிமையாளர் நவீன் குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே அதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 13 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :